வண்ணம் படைக்க நான் படிக்க
இன்றோ எனக்கு எண்ணம் இல்லை
என் வண்ணங்கள் நிறைந்த மனம் உடைய
காரணம் ஆவளோ அவள்
சதை, நரம்பு, இரத்தம் முழுவதிலும்
அவள் நிறைந்து இருக்க
பார்த்து, பழகி, சிரித்து, மகிழ்ந்த
அவளது நினைவுகளை எப்படி நான் மறக்க
பேச வார்த்தைகள் இருந்தும் வரிகள் ஆகாது
நினைக்க மனம் இருந்தும் கல்லாக்க பட்டது
அவளும் என்ஆசைகளும் அடையா நிலையில்
வாழ்கை அடைந்த இடமோ ?
- வ.வள்ளியப்பன்
23/march/2010
No comments:
Post a Comment