நேற்று இருந்த நான் எங்கே ?
தொலைந்து போன என் மனம் எங்கே ?
தேட நினைக்கும் உடல் இங்கே.
கண்ணீரில் கண்டுஎடுதேன் என்னை.
நீருக்குள் கண்ணிர் காணமல் போகலாம்,
உயிருக்குள் கலந்த அவள் எப்படி போவாள்.
அவளை மறக்க என் உயிரை எடுத்தேன்
மிஞ்சிய நினைவுகளால் உயிர் கொடுக்கிறாள்.
மதுவே அவளை மறக்கவைக்கும் தோழன் என கருத
அவளால் உண்டான போதை தெளியவே என் ஆயுள் ஆகுமோ
என் ஏக்கத்தை சொல்ல வார்த்தைகள் இருந்தாலும்
கூற மனம் யோசிக்கிறது
வார்த்தைகள் நினைவுக்களாய் மாறி
என்னுள்ளே அவளை வாழவைக்கிறது.
முடிந்த காதலை நினைத்தால் வருத்தம்தான்
அதனை மறந்தால்தானே நினைக்க என என் மனம் கூறியது!
(சிரிப்பதா? / அழுவதா?)
- வ. வள்ளியப்பன்
13/April/2010
No comments:
Post a Comment